மிக்ஜாம் புயல் எதிரொலி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(06/12/2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக, சென்னை உட்பட வட தமிழக கரையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், நேற்றும், இன்றும், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு, பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மழைப்பொழிவு நின்று வெள்ளம் வடிய தொடங்கி விட்டதால், நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.