NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம் 
    தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமிட்டுள்ளது

    சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 04, 2024
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அதோடு மேலும் சில பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமிட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    முதற்கட்டமாக சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

    அதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

    சிகாகோ 

    சிகாகோ பயணம்

    சான் ஃபிரான்ஸிஸ்கோ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு முதலமைச்சர் சிகாகோ சென்றார். அங்கேயும் சில பன்னாட்டு நிறுவனங்களுடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    இதன் படி அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமிட்டுள்ளது.

    அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்

    Another fruitful day in Chicago!

    Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai. pic.twitter.com/tnZ4yOO8uF

    — M.K.Stalin (@mkstalin) September 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக அரசு
    தமிழக முதல்வர்
    ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    14 வயது சகோதரியை விபச்சாரம் செய்ய வற்புறுத்திய சென்னை பெண் கைது காவல்துறை
    ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி திமுக
    வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் அரசு பள்ளி
    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு கொலை

    தமிழக அரசு

    முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS  உள்துறை
    அதிகரிக்கும் தக்காளியின் விலை; மீண்டும் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளை விற்க தமிழக அரசு திட்டம் விலை
    அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர்
    இனி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசம் மருத்துவம்

    தமிழக முதல்வர்

    தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை தீபாவளி
    டிசம்பர் 1 முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை 3 சதவீதம் வரை குறைப்பு தமிழக அரசு
    பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு  பொங்கல் பரிசு
    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல் தமிழக அரசு

    ஸ்டாலின்

    மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள் முதல் அமைச்சர்
    இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? முடி பராமரிப்பு
    வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025