NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது
    இந்தியா

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது
    எழுதியவர் Nivetha P
    Feb 21, 2023, 07:57 pm 1 நிமிட வாசிப்பு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது

    திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து போலீசார் கைதுசெய்து திருவண்ணாமலை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 13 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட மேலும் 2 கொள்ளையர்கள் அரியானாவில் உள்ளதாக தனிப்படை போலீசார் அறிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட 2 கொள்ளையர்களும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

    இந்நிலையில் மேலும் 2 வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று(பிப்.,21) கைது செய்துள்ளார்கள். கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேனை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள். கொள்ளையர்கள் கர்நாடகாவில் இருந்து அரியானாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 2 கொள்ளையர்களும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவுள்ளார்கள். இதன்மூலம் போலீசார் கைது செய்த கொள்ளையர்களின் எண்ணிக்கை 4 ஆக தற்போது அதிகரித்துள்ளது. எஞ்சியுள்ள கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    திருவண்ணாமலை
    தமிழ்நாடு

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்  தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  காவல்துறை
    சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!  சென்னை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்  பிறந்தநாள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  சென்னை
    தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு தமிழக அரசு
    இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023