NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து
    திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து

    திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து

    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி-திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லாத ரயில்கள் இன்றும்(டிச.,22), நாளையும்(டிச.,23) ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதற்கான செய்தி குறிப்பில், தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.

    குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகம்.

    இந்த பெருமழை, வெள்ளம் காரணமாக செய்துங்கநல்லூர்-ஸ்ரீவைகுண்டம் இடையேயான ரயில்வே தண்டவாளங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    ரயில் 

    தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முன்பதிவில்லாத ரயிலும் ரத்து 

    தற்போது அதன் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே இயங்கும் அனைத்து முன்பதிவில்லாத ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    அதே போல், தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முன்பதிவில்லாத 06667 ரயிலும் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

    வாஞ்சிமணியாச்சி என்னும் பகுதியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலும் திருநெல்வேலி ஜங்க்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரத்து 

    திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் 

    தொடர்ந்து, தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் சீரமைப்பு பணிகள் நிறைவுற்ற காரணத்தினால் வழக்கம் போல் இயக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி, நேற்று(டிச.,21) சென்னையிலிருந்து கிளம்பிய முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி சென்றடைந்தது.

    மேலும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடக்கும் சீரமைப்பு பணி காரணமாக திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் செல்லக்கூடிய ரயில் இன்று இரவு 9.35க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்-பாலக்காடு செல்லும் ரயில் இன்று மதியம் 1.30 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்செந்தூர்
    திருநெல்வேலி
    ரயில்கள்
    தூத்துக்குடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி பள்ளிகளுக்கு விடுமுறை
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா மாவட்ட செய்திகள்
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் சென்னை உயர் நீதிமன்றம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு கடற்கரை

    திருநெல்வேலி

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் காவல்துறை
    பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது  தமிழ்நாடு
    கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன? தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  காவல்துறை

    ரயில்கள்

    பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி ரத்து  திருச்சி
    ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு  பயணம்
    சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில் சேவை துவங்க திட்டம் மத்திய அரசு
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை மும்பை

    தூத்துக்குடி

    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  தமிழ்நாடு
    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தமிழக அரசு
    குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள்  இந்தியா
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது  உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025