NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 
    செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை

    செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 

    எழுதியவர் Nivetha P
    Jun 20, 2023
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், அமைச்சரின் மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

    இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜூன் 15ம்தேதி இரவு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இதனிடையே அவரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியதற்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் ஜூன் 16ம்தேதி அனுமதியளித்து உத்தரவிட்டது.

    மேலும் அவரது உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரது சிகிச்சைக்கு இடையூறு அளிக்காமல் விசாரணையினை மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

    அமலாக்கத்துறை

    இதுவரை அமைச்சரை காவலில் எடுக்கவில்லை என்று விளக்கம் 

    இதன் காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியினை விசாரிக்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது.

    இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியான அல்லி முன்னர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், "காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரை இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை" என்று தகவல் அளித்துள்ளார்.

    இதனிடையே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிக்க அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்கானது நாளை(ஜூன்.,21) விசாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    வெப்பத்தைத் தணிக்க வருகிறது மழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படுமா? "No" சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா
    டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு ஆன்லைன் வணிகம்
    கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீது துப்பாக்கிச் சூடு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கி சூடு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை  இந்தியா
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  மின்சார வாரியம்
    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு  மு.க ஸ்டாலின்

    சென்னை

    அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா?  திரையரங்குகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  இந்தியா
    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  கொரோனா
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025