NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு; எதற்காக?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு; எதற்காக?
    கிட்டத்தட்ட 2 ஆயிரம் கடைகள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளன

    மதுரை திருமங்கலத்தில் இன்று முழு கடையடைப்பு; எதற்காக?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2024
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி, இன்று திருமங்கலம் மற்றும் கப்பலூர் சிட்கோ பகுதியில் உள்ள கடைகள் முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.

    கிட்டத்தட்ட 2 ஆயிரம் கடைகள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றுள்ளன. விதிகள் படி, சுங்கச்சாவடி நகரின் எல்லையில் இருந்து 4கிமீ தொலைவில் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால் இந்த சுங்கச்சாவடி 2கிமீ தொலைவிலேயே அமைந்திருப்பதால், உள்ளூர்வாசிகள் தினசரி பயன்பாட்டிற்கே டோல் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் தற்காலிகமாக கட்டண விலக்கு அளிப்பதும், பின்னர் மீண்டும் கட்டணம் வசூலிப்பதும் வாடிக்கையாக உள்ளது என மக்கள் ஆவேசத்துடன் பல முறை சுங்க சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் புறக்கணிப்பு

    தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்த மக்கள்

    பலமுறை மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும், நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலையில் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டு, அனைத்து கடைகளிலும் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன.

    அப்போதும் இந்த நிலை நீடித்ததால், இன்று கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு தலைமையில் திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவுடன், முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதனால், கார், வேன், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளும் இயக்கப்படவில்லை.

    அதோடு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கப்பலூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் 450க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    போராட்டம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    மதுரை

    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  ஆட்சியர்
    மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை ஸ்டாலின்
    மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  உயர்நீதிமன்றம்

    போராட்டம்

    சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது கைது
    காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்  தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் ஹாலிவுட்
    சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன? சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025