NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு 
    ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு

    ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 13, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று(ஏப்ரல்.,12) காலை நிலவரப்படி வினாடிக்கு 340 கன அடி நீர்வரத்து இருந்துள்ளது.

    44.28 அடி உயரம் கொண்ட அணையில் 41.49 அடி நீர் இருப்பு இருப்பதால், வரத்தான 340 கன அடி நீரும் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்படுகிறது.

    கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து தென்பெண்ணையாற்றில் 340 கன அடி நீர்வரத்து செல்லும் நிலையில் தினமும் அந்த ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுக்க துவங்கியுள்ளது.

    அதன்படி வழக்கத்தை விட, நேற்று(ஏப்ரல்.,12) காலை முதல் இந்த நுரை அதிகமாகியுள்ளது.

    கர்நாடகாவில் இருந்து வரும் நீரில் அதிகளவு ரசாயனம் கலக்கப்பட்டு வருவதால் இவ்வாறு நுரைகள் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    ரசாயனம் 

    காற்றில் பறக்கும் ரசாயன நுரையால் பயிர்கள் பாதிக்கக்கூடும் 

    இந்நிலையில் நேற்று ஆற்றில் நீர் செல்வது கூட தெரியாத அளவிற்கு ரசாயன நுரை மலை போல் ஆற்றில் தேங்கியுள்ளது.

    இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள விளை நிலங்கள் மீது விழுகிறது.

    இதனால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் தேங்கி நிற்கும் ரசாயன நுரையால் ஏற்படும் துர்நாற்றத்தால் கரையோரம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

    எனினும் இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளோ, மாவட்ட அதிகாரிகளோ இதனை நேரில் வந்து ஆய்வினை மேற்கொள்ளவில்லை.

    இச்செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கர்நாடகா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் சுகாதாரத் துறை
    தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு மாவட்ட செய்திகள்
    திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள் திருச்சி

    கர்நாடகா

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் பெங்களூர்
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் காவல்துறை
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025