NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல் 

    பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த மாணவர்கள்: கேள்வி எழுப்பிய பள்ளி ஊழியர்கள் மீது தாக்குதல் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2024
    01:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானாவின் மன்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு காவி உடை அணிந்து வந்த்தால் அப்பள்ளியின் முதல்வர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனையடுத்து, அப்பள்ளிக்குள் நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

    ஹைதராபாத்தில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள கன்னேபள்ளி கிராமத்தில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரசா உயர்நிலைப் பள்ளியின் அதிகாரிகள், கேரளாவைச் சேர்ந்த முதல்வர் ஜெய்மோன் ஜோசப், இரண்டு நாட்களுக்கு முன்பு சில மாணவர்கள் காவி உடை அணிந்து பள்ளிக்கு வந்ததை கவனித்ததாகக் கூறியுள்ளனர்.

    தெலுங்கானா 

    பள்ளி  முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு 

    இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, தாங்கள் ​​21 நாள் அனுமன் தீக்ஷையை கடைப்பிடிப்பதால் காவி உடை அணிதிருப்பதாக அவர் பதிலளித்திருக்கின்றனர்.

    இதைப் பற்றி பேசுவதற்கு, அவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு முதல்வர் கூறி இருக்கிறார்.

    இந்நிலையில், யாரோ ஒருவர் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, பள்ளி வளாகத்தில் இந்து உடையை அனுமதிக்கவில்லை என்று கூறியதால் விஷயம் கையை மீறியது.

    அதன் பின், அந்த பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    தெலுங்கானா

    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்
    முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது கைது
    ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி ஹைதராபாத்
    நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025