NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம் 
    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்

    தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 06, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார்.

    இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்ற மாநில அதிகாரிகளும் தங்கள் மாநிலத்தில் இதனை செயல்படுத்தும் நோக்கில் தமிழகம் வந்து இத்திட்டத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவ், இத்திட்டத்தினை தங்கள் மாநிலத்தில் துவங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

    அதன்படி, இன்று(அக்.,6) முதல் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தினை அம்மாநில முதல்வர், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார்.

    திட்டம் 

    வெளியிடப்பட்ட உணவு பட்டியல் 

    அதனையடுத்து மாநிலம் முழுவதும் தெலுங்கானா அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர்.

    ரூ.3,400 கோடி செலவில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் மூலம் 43,000 அரசு பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனிடையே இந்த திட்டத்தின்படி திங்கட்கிழமை தோறும் இட்லி, சாம்பார், ரவா கோதுமை உப்மா, சட்னி உள்ளிட்டவை விநியோகிக்கப்படுமாம். செவ்வாய்க்கிழமை பூரி-உருளைக்கிழங்கு, சாம்பார் மற்றும் தக்காளி சாதம்,

    புதன்கிழமை அரசி ரவா கிச்சடி(அ)உப்புமா, சாம்பார், சட்னி, வியாழக்கிழமை தினை இட்லி(அ)பொங்கல் மற்றும் சாம்பார் பரிமாறப்படும்.

    அதேபோல் வெள்ளிக்கிழமை போஹா(அ)தினை இட்லி(அ)உக்கானி(அ)கோதுமை ரவா கிச்சடி, சனிக்கிழமை பொங்கல்-சாம்பார் அல்லது காய்கறி புலாவ், உ.கிழங்கு குருமா உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்
    தெலுங்கானா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    தமிழ்நாடு

    பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: பின்னணி என்ன? பாஜக
    விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி விசிக
    ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை  அமலாக்க இயக்குநரகம்
    ஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு செய்தி

    மு.க ஸ்டாலின்

    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை கருணாநிதி
    'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்  தமிழ்நாடு
    தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து ஆந்திரா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது ஆந்திரா
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025