NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்! 
    நாண்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது டிசிஎஸ்

    காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 13, 2023
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது.

    அந்நிறுவனத்தின் லாபம் தற்போது முடிந்த மார்ச் காலாண்டில் அதற்கு முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட 14.76% உயர்ந்து 11,392 கோடியாக உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது டிசிஎஸ். மேலும், அதன் வருவாயும் 16.9% உயர்ந்து 59,162 கோடியாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.

    நேற்று அந்நிறுவனம் காலாண்டு முடிவுகள் வெளியிடுவதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் 1% ஏற்றம் கண்டன.

    மேலும், காலாண்டு முடிவுகளுடன் கடந்த நிதியாண்டிற்கான டிவிடண்ட் தொகையையும் அறிவித்தது அந்நிறுவனம். அதன்படி ஒரு பங்குக்கு ரூ.24 டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்திருக்கிறது டிசிஎஸ்.

    பங்குச்சந்தை

    பங்குச்சந்தையில் சரிவு: 

    டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 14% அதிகரித்திருந்தாலும், இன்றும் பங்குச் சந்தையில் சரிவையே சந்தித்திருக்கிறது அந்நிறுவனம்.

    இன்று காலை சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கியது அந்நிறுவனப் பங்குகள், தற்போது 1.48% சரிந்து 3,193 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது.

    பங்குச்சந்தை நிபுணர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் சராசரியாக 11,530 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பார்ப்பை விட குறைவான லாபத்தையே டிசிஎஸ் நிறுவனம் ஈட்டியிருப்பதால், இன்று பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்திருக்கிறது.

    இந்தியாவில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் காலாண்டு முடிவுகளை முதலில் டிசிஎஸ் நிறுவனமே வெளியிட்டிருக்கிறது. இது மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு அளவுகோளை நிர்ணயித்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    வணிக செய்தி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    வணிக செய்தி

    ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை
    தடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல் மத்திய அரசு
    இதுவரை இல்லாத அளவிற்கு எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை! தங்கம் வெள்ளி விலை
    சத்தமில்லாமல் மகனின் நிச்சயதார்த்தை முடித்த கெளதம் அதானி! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025