NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிபிசி அலுவலகங்களில் ரெய்டு: மொபைல்,லேப்டாப்கள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிபிசி அலுவலகங்களில் ரெய்டு: மொபைல்,லேப்டாப்கள் பறிமுதல்
    பத்திரிகையாளர்களின் மொபைல் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல்

    பிபிசி அலுவலகங்களில் ரெய்டு: மொபைல்,லேப்டாப்கள் பறிமுதல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத் தொடர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில வாரங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று(பிப் 14) காலை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

    சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுத்து, வருமான வரிதுறை அதிகாரிகள் பிபிசி (பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்) அலுவலகங்களில் ஒரு "ஆய்வு" மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

    சுமார் 20 வருமான வரிதுறை அதிகாரிகள் பிபிசியின் டெல்லி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மும்பையில், தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிபிசி ஸ்டுடியோஸில் சோதனை நடத்தப்பட்டது.

    ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், பத்திரிகையாளர்களின் மொபைல் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மும்பை

    இது ஒரு ஆய்வு. சோதனை அல்ல.

    இது ஒரு ஆய்வு மட்டுமே, சோதனை அல்ல என்றும், மொபைல்கள் திருப்பித் தரப்படும் என்றும் வருமான வரிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    "எங்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்பட்டன. அதற்காக எங்கள் குழு பிபிசி அலுவலகத்திற்குச் சென்றது. நாங்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் அதிகாரிகள் கணக்கு வழக்கை சரிபார்க்கச் சென்றுள்ளனர், இவை சோதனைகள் அல்ல." என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    வரி அதிகாரிகள், பிபிசியின் நிதித் துறையிடம் அதன் கணக்குகளின் விவரங்களைக் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

    கடந்த மாதம், பிபிசியின், "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற ஆவணத்தொடர் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இதனால், இந்தியாவில் பெரும் சர்ச்சை கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு சென்னை
    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம் இல்லை: மத்திய அரசு காதலர் தினம் 2023
    தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்; தொழில்நுட்பம்

    நரேந்திர மோடி

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது பாஜக
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் குடியரசு தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025