NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா
    மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா

    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2023
    08:43 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) இந்தியாவில் உள்ள மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய ஆசிரியர் கல்விக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் மாணவர்களிடையே உரையாற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார்.

    அப்போது சமஸ்கிருத மொழி, உபநிடதங்கள் மற்றும் வேதங்களில் உள்ள அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமித் ஷா வலியுறுத்தினார்.

    மேலும், நமது பண்டைய இந்திய கல்வித் தத்துவத்தை நவீன பரிமாணத்துடன் இணைப்பது முக்கியம் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

    அறிவு மற்றும் அறிவியல் துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மாற்றங்களைப் புரிந்துகொண்டு இரண்டையும் ஒன்றிணைத்து முழுமையான கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்றார்.

    amit shah bats for improvement of indian languages

    அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த வேண்டும்: அமித் ஷா

    தேசிய கல்விக் கொள்கை 2020இன் முக்கிய அம்சம் மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பதாகும் என்று அமித் ஷா கூறினார்.

    அவர் தொடர்ந்து, "அனைத்து இந்திய மொழிகளிலும் நமது கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணம் உள்ளதால் அவற்றைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் உங்கள் பொறுப்பு. நமது மொழியை வலிமையாக்க வேண்டும்.

    ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகியவற்றைக் கற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் குஜராத்தில் இருக்கும் ஒரு மாணவன் குஜராத்தி மற்றும் இந்தி இரண்டையும் கற்க வேண்டும்.

    ஒரு அசாமி அஸ்ஸாமி மற்றும் இந்தி இரண்டையும் கற்க வேண்டும். ஒரு தமிழன் தமிழ் மற்றும் இந்தி இரண்டையும் கற்க வேண்டும்.

    இது நடந்தால், நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது." என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமித்ஷா
    இந்தியா
    கல்வி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமித்ஷா

    அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? - முதல்வர் மு.க.ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    காங்கிரஸ் வென்றால் கர்நாடகா கலவர பூமியாக மாறும்: அமித்ஷா இந்தியா
    அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி  எடப்பாடி கே பழனிசாமி
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  இந்தியா

    இந்தியா

    'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு  மத்திய அரசு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 9 தங்கம் வெள்ளி விலை
    உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு தவறுதலாக ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கிய மத்திய அரசு  மத்திய அரசு

    கல்வி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025