NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
    தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 25, 2024
    04:29 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது.

    திங்கட்கிழமை (நவம்பர் 25), இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குள் தமிழக-இலங்கை கடற்கரையை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆர்எம்சி இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

    கனமழை

    கனமழை எச்சரிக்கை

    இதற்கிடையில், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அமலில் உள்ளது.

    ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் போன்ற பிற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும்.

    சென்னையில், நவம்பர் 27 மற்றும் 29 க்கு இடையில் மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த அமைப்பு ஒரு சூறாவளியாக உருவாகுமா என்பதை தீர்மானிக்க தொடர் கண்காணிப்பு தேவை என்றும் ஆர்எம்சி குறிப்பிட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

    கனமழையை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை ஆய்வு மையம்
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்
    கெனிஷா வாழ்வின் ஒளி... நல்ல தந்தையாக தொடர்வேன்.. ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு ரவி மோகன் பதில் ரவி
    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்

    வானிலை ஆய்வு மையம்

    இந்த மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் அறிவிப்பு வானிலை அறிக்கை
    வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை அறிக்கை
    தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை

    வானிலை அறிக்கை

    அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப் போகுது வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    இன்னும் 2 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் குறையாது; வானிலை முன்னறிவிப்பு வானிலை எச்சரிக்கை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; மழை பெய்ய வாய்ப்புள்ளதா? வானிலை எச்சரிக்கை
    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? வானிலை எச்சரிக்கை

    வானிலை எச்சரிக்கை

    அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை ஆய்வு மையம்
    மிஷன் மௌசம்: இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ.2,000 கோடியில் புதிய திட்டம் வானிலை அறிக்கை
    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை

    வானிலை எச்சரிக்கை

    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025