NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்!
    புயல் காரணமாக 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 11, 2022
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த புயல் சென்னையின் தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கப் போகிறது.

    இந்நிலையில், காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவாரூர், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கொடைக்கானல், சிறுமலை (வட்டம்), கிருஷ்ணகிரி(பள்ளிகளுக்கு மட்டும்), தருமபுரி, கரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், தேனி(பள்ளிகளுக்கு மட்டும்), தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கனமழை

    கனமழை மற்றும் புயலால் ஏற்படும் சேதங்கள்:

    மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்ததுள்ளன. கடந்த 2 நாட்களுக்குள் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்து இருக்கிறதாம்.

    இது போக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழையாலும் பலத்த காற்றாலும் பல வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

    மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    மாமல்லபுரம் அருகே இந்த மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மணிக்கு 80 km வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    மேலும், முடிந்தவரை பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெதர்மேன்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    வெதர்மேன்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி மன அழுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025