Page Loader
முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 11, 2024
07:04 pm

செய்தி முன்னோட்டம்

பல்வேறு துறைகளில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியமாக, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரை தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அர்ச்சனா பட்நாயக் அந்த பொறுப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள்

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியல்

சுற்றுலாத்துறையில் இயக்குனராக இருந்த சமயமூர்த்தி இனி மனிதவள மேலாண்மைத் துறையின் செயலாளராகப் பணியாற்றுவார். தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இயக்குனராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், புதிய சுற்றுலா இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அருண் தம்புராஜ் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அதுல் ஆனந்த் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறையின் செயலாளராக பொறுப்பேற்கிறார். மேலும், முன்னாள் சமக்ர சிக்ஷா அபியான் இயக்குநராக இருந்த ஆர்த்தி ஐஏஎஸ், மேலே குறிப்பிட்டுள்ளபடி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் துணைச் செயலாளராக இணைய உள்ளார். பல்வேறு துறைகளிலும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.