NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
    இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

    எழுதியவர் Sindhuja SM
    Aug 27, 2023
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    2023ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 2 ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதே போல், ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் இந்தியாவில் சிறப்பாக பணிபுரிந்து சேவையாற்றிய 50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

    இந்நிலையில், இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    இந்தியா முழுவதில் இருந்தும் 50 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    சின்க்வெஜ்

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் விருதை பெற இருக்கும் ஆசிரியர்கள் 

    மதுரை அலங்காநல்லூர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்து வரும் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்ற ஆசிரியருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் மாலதி என்ற ஆசிரியைக்கும் இந்த வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

    வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற இருக்கும் விழாவில் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படும்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு இந்த விருதை வழங்குவார்.

    இது தவிர, மாநில அரசு சாரிப்பில், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 385 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழ்நாடு

    மஞ்சள் நிற பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்
    சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலையில் வீழ்ச்சி சென்னை
    எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எம்எஸ் தோனி
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சுதந்திர தினம்

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025