NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை 
    தமிழ் மொழி அமைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை

    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை 

    எழுதியவர் Nivetha P
    Jul 02, 2023
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    வடஅமெரிக்காவின் தமிழ் சங்கப்பேரவை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார்.

    அப்போது அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "தமிழ்மொழி அனைவரையும் வாழவைக்கும், வாழ வைத்து கொண்டிருக்கிறது" என்று பெருமிதமாக பேசியுள்ளார்.

    தொடர்ந்து அவர், கணிக்க முடியா தொன்மையான வரலாற்றினை தமிழும், தமிழ் இனமும் கொண்டுள்ளது.

    எழுத்தறிவு மற்றும் படிப்பறிவு கொண்ட மேம்பட்ட சமூகமாகவே தமிழ் சமூகம் விளங்குகிறது.

    இதற்கு கீழடி அகழாய்வு முடிவுகள் சான்றாக அமைந்துள்ளது.

    இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுகளை கொண்ட மாநிலம் தமிழகம் தான்.

    அதிலும் மதுரை மாவட்டத்தில் அதிகளவு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    தாமிரபரணியாற்றின்பகுதியில் உள்ள கரும்பொருநை என்னும் பகுதியில் நடந்த ஆய்வுகள்மூலம் 3100 ஆண்டுகளுக்கும் முந்தைய சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    ஸ்டாலின் உரை 

    விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவு

    இதனை தொடர்ந்து பேசிய அவர், மயிலாடுதுறையில் நடத்தப்பட்ட ஆய்வில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பினை உபயோகித்த சமூகமாக தமிழ் சமூகம் இருந்துள்ளது.

    சிவகிரியில் நடந்த ஆய்வில் செங்கல் வடிகால் அமைப்பு மூலம் நல்ல தண்ணீர் எடுத்த தமிழ் சமூகம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியவந்தது.

    தொல்லியல் துறை ஆய்வுகள் மூலமே தமிழரின் வரலாறு வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அதனை மேலும் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

    அதன்படி அகரம், கொந்தகை, துலுக்கப்பட்டி போன்ற 7 இடங்களில் மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ் என்பது மொழியாக மட்டுமில்லாமல் உயிராக, அமுதாக, மணமாக இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தொல்லியல் துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மு.க ஸ்டாலின்

    விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - 12 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சிபிசிஐடி
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்  ஜப்பான்
    விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி சிபிசிஐடி

    தொல்லியல் துறை

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  காஞ்சிபுரம்
    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  ஹைதராபாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025