NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தூய்மை இந்தியா' திட்டம்: 75% இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தூய்மை இந்தியா' திட்டம்: 75% இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது 
    கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடியால் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது .

    'தூய்மை இந்தியா' திட்டம்: 75% இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 02, 2023
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) திட்டத்தை தொடங்கி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது.

    இந்த ஒன்பது ஆண்டுகளில், தூய்மை மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

    உலகின் மிகப்பெரிய தூய்மை இயக்கங்களில் ஒன்றான 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இதுவரை 14 மாநிலங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் மொத்தமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மொத்தம் இருக்கும் 28 மாநிலங்களுள் 14 மாநிலங்களிலும் 8 யூனியன் பிரதேசங்களிலும் திறந்தவெளி மலம் கழித்தல் 100% ஒழிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத(ODF) பிளஸ் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இந்த பகுதிகளை ODF பிளஸ் என்றும் அழைக்கலாம்.

    சிக்க்ள

    கடந்த ஆண்டுகளில் இந்திய கிராமங்கள் எந்த அளவு முன்னேறி உள்ளன?

    கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடியால் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது .

    அப்போதிலிருந்து இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை, 75% இந்திய கிராமங்கள்(அதாவது 4.49 லட்ச கிராமங்கள்) தங்களை ODF பிளஸ் என்று அறிவித்துள்ளதாக குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 1, 2023 நிலவரப்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 4,49,005 ODF பிளஸ் கிராமங்களில், 11,23,41,558 வீட்டுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

    2,32,889 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மையும், 3,82,395 கிராமங்களில் திரவக் கழிவு மேலாண்மையும், 2,388 பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையும், 1,631 கிராமங்களில் கோபர்தன் ஆலைகளும் கடந்த 9 ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    இந்தியா

    கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் இந்திய ஹேக்கர்கள் குழு சைபர் கிரைம்
    டைம்ஸ் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 91 இந்திய பல்கலைக்கழகங்கள்  உலகம்
    ரூ.2000 நோட்டுகள் - வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் நாளையோடு நிறைவு  ரிசர்வ் வங்கி
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் மத்திய பிரதேசம்

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா
    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை இந்தியா
    "பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி இந்தியா
    ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025