NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது
    இந்தியா

    வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது

    வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது
    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2023, 12:51 pm 1 நிமிட வாசிப்பு
    வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது
    இந்த பறவை நேற்று பரதீப்பில் உள்ள கடல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரையில் மீன்பிடி படகில் இருந்து கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிபட்டது. இந்த பறவை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் சிலர் தங்கள் படகில் இருந்த புறாவை பிடித்தனர். இந்த பறவை நேற்று(மார் 8) பரதீப்பில் உள்ள கடல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. "எங்கள் கால்நடை மருத்துவர்கள் பறவையை பரிசோதிப்பார்கள். அதன் கால்களில் பொருத்தப்பட்ட சாதனங்களை ஆய்வு செய்ய நாங்கள் மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவியை நாடுவோம். அதில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் ஒரு கேமரா மற்றும் மைக்ரோசிப் போல் தெரிகிறது," என்று ஜகத்சிங்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் பிஆர் தெரிவித்தார்.

    பறவையின் இறகுகளில் இருந்த எழுத்துக்கள்

    உள்ளூர் போலீஸாருக்குத் தெரியாத மொழியில் பறவையின் சிறகுகளில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறதாம். "எழுதப்பட்டதைக் கண்டறிய நிபுணர்களின் உதவியும் கோரப்படும்" என்று எஸ்பி கூறியுள்ளார். 'சாரதி' என்ற மீன்பிடி இழுவை படகின் ஊழியர் பீடம்பர் பெஹெரா, படகில் முதன்முதலாக புறாவை தான் பார்த்ததாக கூறினார். "திடீரென்று பறவையின் கால்களில் சில கருவிகள் இணைக்கப்பட்டிருப்பதை நான் கவனித்தேன். அதன் இறக்கைகளில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும் கண்டேன். அது ஒடியாவில் இல்லாததால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்று பெஹெரா கூறியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோனார்க் கடற்கரையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டபோது, ​​புறா கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அந்த பறவைக்கு உடைத்த அரிசியை உணவாக கொடுத்ததாக பெஹெரா கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா

    இந்தியா

    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா உலகம்
    தங்கம் விலை இன்றும் குறைவு - இன்றைய நாளின் விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள் ஆஸ்திரேலியா
    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023