NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 
    விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 05, 2023
    05:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 5) ஒத்திவைத்தது.

    உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 16 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு தனது உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

    கடந்த மாதம் முதல், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்ததது.

    ஆகஸ்ட் மாதம் நடந்த விசாரணையின் போது, ​​​​மத்திய அரசு தனது சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் செய்கிறது என்றும் நாட்டின் விதியை கடைபிடிக்கவில்லை என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.

    டவ்க்ள்

    'அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ய முடியாது': மனுதாரர்கள்

    மனுதாரர் ரிஃபாத் ஆர் பட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது "அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஒரு உன்னதமான உதாரணம்" என்றார்.

    நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அக்பர் லோன் மற்றும் ஹுசைன் மசூதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்று வாதிட்டார்.

    ஆனால், இந்த குற்றசாட்டுகளை எல்லாம் மறுத்த மத்திய அரசு, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக வாதிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய விதியை ரத்து செய்வதில் "அரசியலமைப்பு மோசடி" இல்லை என்று மத்திய அரசு கூறியது.

    இந்நிலையில், இன்று இதற்கான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்

    ஜம்மு காஷ்மீர்

    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி வைரல் செய்தி
    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு இந்தியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  இந்தியா
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  கைது
    மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு மணிப்பூர்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை  மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025