NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 
    இந்தியா

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    September 05, 2023 | 05:45 pm 1 நிமிட வாசிப்பு
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் 
    விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 5) ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 16 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு தனது உத்தரவை ஒத்திவைத்துள்ளது. கடந்த மாதம் முதல், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்ததது. ஆகஸ்ட் மாதம் நடந்த விசாரணையின் போது, ​​​​மத்திய அரசு தனது சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் செய்கிறது என்றும் நாட்டின் விதியை கடைபிடிக்கவில்லை என்றும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.

    'அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ய முடியாது': மனுதாரர்கள்

    மனுதாரர் ரிஃபாத் ஆர் பட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது "அதிகார துஷ்பிரயோகத்திற்கு ஒரு உன்னதமான உதாரணம்" என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அக்பர் லோன் மற்றும் ஹுசைன் மசூதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ய முடியாது என்று வாதிட்டார். ஆனால், இந்த குற்றசாட்டுகளை எல்லாம் மறுத்த மத்திய அரசு, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவாக வாதிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய விதியை ரத்து செய்வதில் "அரசியலமைப்பு மோசடி" இல்லை என்று மத்திய அரசு கூறியது. இந்நிலையில், இன்று இதற்கான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஜம்மு காஷ்மீர்
    உச்ச நீதிமன்றம்

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது கைது
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு தேர்தல்
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை உண்டு  சட்டம் பேசுவோம்
    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தூத்துக்குடி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023