NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு
    இரா.கோ.ராஜாராம் எழுதிய 'குறளின் பயணம்' என்ற புத்தகத்தை வெளியிட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன்

    தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 05, 2023
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சிறப்புமிக்க தென்காசி நகரத்தில் அமைந்துள்ள பழமையான திருவள்ளுவர் கழகம், சமீபத்தில் தனது 96வது திருக்குறள் விழாவை துவங்கியது.

    ஆண்டுதோறும், கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவில், தமிழ் கூறும் வல்லுனர்களும், திருக்குறள் பால் பற்றுகொண்ட பண்டிதர்களும், பள்ளி மாணவர்களும் பங்கேற்பது வழக்கம். இந்த விழாவின் போது மாணவர்களுக்கு திருக்குறள் சார்நத போட்டிகளும் நடைபெறும்.

    இந்த ஆண்டு, ஜூன் 3 ஆம் தேதி துவங்கிய இந்த விழாவில், வரும் ஜூன் 10ஆம் தேதி வரை பல்வேறு கருத்தரங்கங்கள், பொது கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, கடந்த சனிக்கிழமை (ஜூன் 3) நடைபெற்ற விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதியான திரு.வெ. ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

    card 2

    'குறளின் பயணம்' புத்தக வெளியீடு 

    தன்னுடைய தமிழ் புலமைக்கு பெயர் பெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் விழாவில் பங்கேற்று, திருக்குறளின் சிறப்புகளை பற்றி பேசினார்.

    இந்த விழாவில், இந்த விழாவில், கழகத்தின் தலைவர், துரை.தம்புராஜ் வரவேற்புரை ஆற்ற, திரு. இரா.கோ.ராஜாராம் எழுதிய 'குறளின் பயணம்' என்ற புத்தகத்தையும் நீதிபதி வெளியிட்டார்.

    அதை திருவள்ளுவர் கழகத்தின் செயலர் திரு.சிவராமகிருஷ்ணன் பெற்று கொண்டார்.

    உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதும், அதன் பின்னர் ஆந்திரா மாநிலம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போதும், இந்த விழாவிற்கு தவறாமல் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டார்.

    இந்த கழகத்தின் 100 வது ஆண்டு விழாவிலும் தான் கலந்துகொள்ள விரும்புவதாகவும் திரு.ராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென்காசி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  ட்ரெண்டிங் வீடியோ

    உச்ச நீதிமன்றம்

    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில்  இந்தியா
    வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025