NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு
    தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 05, 2023
    04:06 pm
    தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு
    இரா.கோ.ராஜாராம் எழுதிய 'குறளின் பயணம்' என்ற புத்தகத்தை வெளியிட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன்

    சிறப்புமிக்க தென்காசி நகரத்தில் அமைந்துள்ள பழமையான திருவள்ளுவர் கழகம், சமீபத்தில் தனது 96வது திருக்குறள் விழாவை துவங்கியது. ஆண்டுதோறும், கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவில், தமிழ் கூறும் வல்லுனர்களும், திருக்குறள் பால் பற்றுகொண்ட பண்டிதர்களும், பள்ளி மாணவர்களும் பங்கேற்பது வழக்கம். இந்த விழாவின் போது மாணவர்களுக்கு திருக்குறள் சார்நத போட்டிகளும் நடைபெறும். இந்த ஆண்டு, ஜூன் 3 ஆம் தேதி துவங்கிய இந்த விழாவில், வரும் ஜூன் 10ஆம் தேதி வரை பல்வேறு கருத்தரங்கங்கள், பொது கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை (ஜூன் 3) நடைபெற்ற விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதியான திரு.வெ. ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

    2/2

    'குறளின் பயணம்' புத்தக வெளியீடு 

    தன்னுடைய தமிழ் புலமைக்கு பெயர் பெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் விழாவில் பங்கேற்று, திருக்குறளின் சிறப்புகளை பற்றி பேசினார். இந்த விழாவில், இந்த விழாவில், கழகத்தின் தலைவர், துரை.தம்புராஜ் வரவேற்புரை ஆற்ற, திரு. இரா.கோ.ராஜாராம் எழுதிய 'குறளின் பயணம்' என்ற புத்தகத்தையும் நீதிபதி வெளியிட்டார். அதை திருவள்ளுவர் கழகத்தின் செயலர் திரு.சிவராமகிருஷ்ணன் பெற்று கொண்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதும், அதன் பின்னர் ஆந்திரா மாநிலம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போதும், இந்த விழாவிற்கு தவறாமல் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த கழகத்தின் 100 வது ஆண்டு விழாவிலும் தான் கலந்துகொள்ள விரும்புவதாகவும் திரு.ராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தென்காசி
    உச்ச நீதிமன்றம்

    தென்காசி

    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  தமிழ்நாடு
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்

    உச்ச நீதிமன்றம்

    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு  தூத்துக்குடி
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023