NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி!
    மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி!

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி!

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 04, 2023
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில், கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

    "எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள்?" என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக.,எம்எல்ஏ.,பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத்திருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டது.

    தொடர்ந்து இவரது மேல்முறையீட்டு மனுவினை சூரத் அமர்வு நீதிமன்றம் விசாரித்து, சூரத் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    card 2

    இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் 

    இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

    அந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத்தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    "அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது; இந்த வழக்கில் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா? ஒரு ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது" என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் காங்கிரஸ்
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா
    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு  போக்குவரத்து காவல்துறை
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025