NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அப்போது தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

    அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமாகி அறுவை சிகிச்சை செய்த நிலையிலும், அவர் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

    இதற்கிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தாலும், அவை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டே வந்தன.

    இந்நிலையில், தொடர் போராட்டத்திற்கு பிறகு, உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    #BREAKING | “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால், அவரின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது;

    ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போடவேண்டும்;… pic.twitter.com/pjsuwAwbdl

    — Sun News (@sunnewstamil) September 26, 2024

    நிபந்தனை

    செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து வழக்கறிஞர் பேட்டி

    செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக சிறையில் இருப்பதால், அவரது அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

    ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

    வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் முறையான ஒத்துழைப்பு தரவேண்டும்.

    ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்." எனத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    உச்ச நீதிமன்றம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா
    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்

    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி உச்ச நீதிமன்றம்
    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி கைது
    தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை  அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன்

    உச்ச நீதிமன்றம்

    'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம்  நீட் தேர்வு
    NEET கருணை மதிப்பெண்கள் ரத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு விருப்பம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் நீட் தேர்வு
    நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்  நீட் தேர்வு
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  டெல்லி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் கடிதம் தேர்தல் ஆணையம்
    33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி தமிழக வெற்றி கழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்தியா-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்துக்கு நான்கு நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு இந்தியா

    தமிழ்நாடு செய்தி

    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு சென்னை
    ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை காவிரி
    வலுக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் தமிழகம்
    மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025