NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு
    தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு

    தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு

    எழுதியவர் Nivetha P
    Jun 09, 2023
    08:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது ஆண்டுக்கு 600 டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் இது தேவையை விட மிக குறைவு என்று கூறப்படுகிறது.

    இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து துவரம் பருப்பானது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதனிடையே, தற்போது நடப்பாண்டினை சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

    இதனையொட்டி மத்திய அரசு மற்றும் மாநில அரசு சிறுதானியங்களின் சாகுபடியினை அதிகரிக்க மானிய உதவிகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாக பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றிற்கு மாற்றாக விவசாயிகள் பலரும் சிறுதானிய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று தெரிகிறது.

    இதனால் விளைச்சல் குறைந்து துவரம் பருப்பின் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது.

    ஆய்வு 

    நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை 

    இச்சூழலை தங்களுக்கு வசதியாக எடுத்துக்கொண்ட ஆன்லைன் வியாபாரிகள் பல்லாயிர டன் துவரம்பருப்புகளை வாங்கி தங்கள் கிடங்குகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.

    இதனிடையே, ஒரேவாரத்தில் கிலோக்கு ரூ.40உயர்ந்து, ஒரு கிலோ ரூ.160க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேநிலை தொடர்ந்தால் பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனால் இந்த பருப்பு வகைகளின் பதுக்கலை கண்டறிந்து அதனை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தோடு கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிடங்குகளில் சோதனைகளை மேற்கொண்டார்.

    ஆனால் அவர் தற்போது சென்னை மாநகர கமிஷனராக மாற்றப்பட்டுள்ளதால்,அவர் ஆரம்பித்த பணிகளை அதிகாரிகள் தொடரவேண்டும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பருப்புவகைகளின் விலை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மத்திய அரசு
    மாநில அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர்  சேலம்
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்

    மத்திய அரசு

    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மும்பை
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு! மொபைல்
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  அதிமுக
    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025