NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 
    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை

    ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை 

    எழுதியவர் Nivetha P
    Jun 20, 2023
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும்.

    இதுவரை நூற்றுக்கணக்கான படகுகளையும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

    பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் பறிபோன காரணத்தினால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில்,கடந்த 2 மாதங்களாக மீன்ப்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    இந்த தடைக்காலமானது அண்மையில் முடிவுற்ற நிலையில் மீனவர்கள், கடந்த 15ம்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்கள் என்று தெரிகிறது.

    கைது 

    இலங்கை கடற்படை உயரதிகாரிகள் அனுமதித்தால் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் 

    இதனைத்தொடர்ந்து நேற்று(ஜூன்.,19)ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க இலங்கைக்கு அருகிலுள்ள நெடுந்தீவு என்னும் பகுதியில், தங்கச்சிமடத்தினை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அவர்கள் சென்ற படகு பழுது காரணமாக பாறையில் சிக்கியது.

    அந்தநேரம் பார்த்து அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வர மீனவர்கள் 9 பேரினை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

    இது குறித்து ராமேஸ்வர மீனவர்கள் சங்க தலைவர் ஜேசுராஜா கூறுகையில், "படகின் எஞ்சின் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியதால் இலங்கை கடற்படை உயரதிகாரிகள் அனுமதி அளிக்கும்பட்சத்தில் மீனவர்களை விடுதலை செய்ய வாய்ப்புள்ளது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடற்கரை
    இலங்கை
    தமிழ்நாடு
    ராமேஸ்வரம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம்
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! கோவிட்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை உலகம்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    தமிழ்நாடு

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  மின்சார வாரியம்
    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு  மு.க ஸ்டாலின்
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி

    ராமேஸ்வரம்

    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இலங்கை
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025