NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்
    தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

    வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 24, 2024
    04:15 pm

    செய்தி முன்னோட்டம்

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    இதன்படி புதன்கிழமை (ஆகஸ்ட் 28) திருச்சியில் பகல் 12 மணிக்கு ரயில் கிளம்பி மாலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

    மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 10.45க்கு கிளம்பும் ரயில் மாலை 4.10க்கு திருச்சிக்கு சென்றடையும்.

    இதேபோல், புதன்கிழமை இரவு 7.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் அடுத்த நாள் அதிகாலை 3.35 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

    மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணிக்கு கிளம்பும் ரயில் சனிக்கிழமை காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    திருவிழா

    வேளாங்கண்ணி திருவிழா

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித அன்னை பேராலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் தேர்த் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த திருவிழாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பங்குபெறுவது வழக்கமாகும். இந்நிலையில், இந்த ஆண்டில் தேர்த்திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி, தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திருவிழாவிற்கு வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதற்கிடையே, தேர்திருவிழாவிற்கான கொடியேற்றத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 29 அன்று நாகை மற்றும் கீழ்வேளூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தென்னக ரயில்வேயின் எக்ஸ் பதிவு

    The following #SpecialTrains will be operated in order to clear heavy rush of passengers during #Velankanni festival. Passengers, kindly take note.#SouthernRailway #RailwayUpdate #RailwayAlert #TrainService #TrainTravel #FestivalSpecial #FestiveSpecial pic.twitter.com/hbtpCGjcNf

    — Southern Railway (@GMSRailway) August 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    திருவிழா
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரயில்கள்

    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது டெல்லி
    தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்  மெட்ரோ
    RRTS ரயில் சேவை, டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. கட்டணம் எவ்வளவு? டெல்லி
    'நமோ பாரத்' ரயில் சேவையினை இன்று துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    திருவிழா

    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    கரூர் காளியம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்  திருநெல்வேலி
    காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகல கொண்டாட்டம்  புதுச்சேரி

    தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது பிரதமர் மோடி
    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி  தமிழக அரசு
    தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது கார்னிங் நிறுவனம் தமிழகம்
    தைப்பூச திருவிழா: கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் திருவிழா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025