NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை
    கடந்த 3 மாதங்களில் இதே நிறுவனத்தில் நடக்கும் 3வது தற்கொலை இதுவாகும்.

    சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்(ஐஐடி) மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

    சென்னையிலுள்ள ஐஐடியில் இந்த வருடம் நடக்கும் 3வது தற்கொலை இதுவாகும்.

    தற்கொலை செய்துகொண்டவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மாணவர் சச்சின் என்றும் அவர் ஐஐடியில் பிஎச்டி படித்துக் கொண்டிருந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கல்லூரி வளாகத்திற்கு வெளியே வேளச்சேரியில் உள்ள தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தற்கொலை செய்து கொளவதற்கு முன்பு, அவர் "மன்னிக்கவும், நான் போதுமானவனாக இல்லை" என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஸ்டேட்டஸை பார்த்த அவரது நண்பர்கள், சச்சின் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது.

    இந்தியா

    ஆராய்ச்சி சமூகத்திற்கு ஒரு பெரிய இழப்பு: ஐஐடி

    அதன் பின் ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

    "2023 மார்ச் 31 அன்று மதியம் சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பிஎச்டி ஆராய்ச்சி மாணவர் அகால மரணமடைந்தார் என்பதை தெரிவித்து கொள்வதில் வேதனையடைகிறோம். முன்மாதிரியான கல்வி அறிவும் ஆராய்ச்சிப் பதிவும் கொண்ட ஒரு மாணவர் உயிரிழந்தது ஆராய்ச்சி சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு" என்று ஐஐடி ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், மூன்றாம் ஆண்டு பிடெக் மாணவர் ஒருவரும், ஆராய்ச்சி மாணவர் ஒருவரும் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்

    சென்னை

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை ஆஸ்திரேலியா
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது காவல்துறை
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு கொரோனா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025