NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
    இந்தியா

    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்

    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 15, 2023, 04:44 pm 0 நிமிட வாசிப்பு
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
    தங்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர உதவிய இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர். லாங் மஜாரியைச் சேர்ந்த லக்விந்தர் சிங், கபுர்தலாவைச் சேர்ந்த குர்பிரீத் சிங், மோகாவைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் மற்றும் பீகாரைச் சேர்ந்த சனோஜ் குமார் ஆகிய இளைஞர்கள் இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்து ஞாயிற்றுக்கிழமை(பிப் 12) தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். அந்த இளைஞர்கள் தாங்கள் விற்கப்பட்டதாகவும், ஒரு நிறுவனத்திற்குள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்ததாகவும், அடிமைகளைப் போல நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், தங்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர உதவிய இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்

    அவர்கள் லிபியாவின் பெங்காசியில் அமைந்துள்ள எல்சிசி சிமெண்ட் நிறுவனத்தில் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்றடைந்த போது, தாங்கள் 3000 டாலர்களுக்கு விற்கப்பட்டதாக அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அங்கு அவர்கள் 18 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், சில சமயங்களில் உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் அவர்களிடம் வேலை வாங்கினர் என்றும் தெரியவந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் துபாய்க்கு ஓட்டுநர் வேலைக்காகச் சென்றதாகவும், ஆனால் மற்ற இளைஞர்களுடன் தான் லிபியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் குர்பிரீத் சிங் கூறி இருக்கிறார். இது போல வேறு யாரும் அங்கு சிக்கி இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் துனிசியாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    இந்தியா
    உலக செய்திகள்
    வெளியுறவுத்துறை

    உலகம்

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலக செய்திகள்
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன  உலக செய்திகள்
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலக செய்திகள்

    இந்தியா

    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்

    உலக செய்திகள்

    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி  உலகம்
    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே இந்தியா
    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  பாகிஸ்தான்

    வெளியுறவுத்துறை

    வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா
    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்  இந்தியா
    இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ இந்தியா
    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023