NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு 

    ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2024
    06:57 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சைபர் காவல்துறை ஏப்ரல் 15 அன்று அதிகாரப்பூர்வமாக இந்த வழக்கைப் பதிவு செய்தது.

    ஆனால் அதன் விவரங்கள் இன்று தான் தெரியவந்தது.

    தொலைக்காட்சி விவாதத்தின் போது சந்திரசேகர் குறித்து சசி தரூர் தவறான தகவலை பரப்பியதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் ஜேஆர் பத்மகுமார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    சந்திரசேகர் குறித்து தரூர் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக பத்மகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    குறிப்பாக சந்திரசேகர் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கடலோரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்வதாக சசி தரூர் கூறியது பிரச்சனையாகி உள்ளது.

    இந்தியா 

    தரூர், இந்த வழக்கு குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

    இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி) பிரிவு 171-ஜி மற்றும் 500 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 65 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தரூர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக சைபர் காவல்துறையின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தரூர், இந்த வழக்கு குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    ஏப்ரல் 10 ஆம் தேதி, திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் சந்திரசேகர், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மீது அவதூறு குற்றம்சாட்டி அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    பாஜக
    கேரளா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காங்கிரஸ்

    சோனியா காந்தி மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாற வாய்ப்பு சோனியா காந்தி
    காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்  பாஜக
    மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி  இந்தியா
    காங்கிரஸில் பெரும் மாற்றம்: ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி  மாநிலங்களவை

    பாஜக

    தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல்  தமிழகம்
    "தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம்  தேர்தல் பத்திரங்கள்
    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி  பிரதமர் மோடி
    பாஜக-பாமக கூட்டணி உறுதி; தொகுதி பங்கீடு குறித்து கையெழுத்து  பாமக

    கேரளா

    விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம் விஜய் ஹசாரே கோப்பை
    கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி  சென்னை
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  சபரிமலை
    கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு ஆளுநர் மாளிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025