NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி
    பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 02, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிரான FIRரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா காந்தி, "நரேந்திர மோடி ஜி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாட்டுக்கு சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்

    DETAILS

    பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான இரண்டு FIRகளில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் 

    தொழில்முறை உதவிக்கு பதிலாக "பாலியல் சலுகைகள்" கோரும் நிகழ்வுகள், குறைந்தது 15 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், தகாத முறையில் மல்யுத்த வீரர்களை தொடுதல், துஷ்பிரயோகம், மார்பகத்தை தொடுதல், தொப்புளைத் தொடுதல், பின்தொடர்தல், மிரட்டல் ஆகியவை பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான FIRரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லி காவல்துறையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு FIRகளில் இவை முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.

    இது குறித்த விரிவான செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரியங்கா காந்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவில் ஒரே நாளில் 224 கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு கொரோனா
    FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்! எலக்ட்ரிக் வாகனங்கள்
     9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட் பிரதமர் மோடி

    பிரியங்கா காந்தி

    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025