NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது
    அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Aug 13, 2023
    03:59 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று(ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்களை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.

    செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளும் சோதனை செய்யப்பட்டது.

    டிஜிக்

    நாளை அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் 

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, விசாரணைக்கு ஆஜராகுமாறு 4 முறை அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் நான்கு முறையும் ஆஜராகவில்லை.

    அதன் பிறகு, அசோக் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் வெளியிடப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் என்பது அவரை எங்கு கண்டாலும் தகவல் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் நோட்டீஸ் ஆகும்.

    இந்நிலையில், இன்று கொச்சியில் வைத்து அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இன்று அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன், அசோக் குமாரின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை அமலாக்கத்துறை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழகத்தில் நாளை நியாயவிலை கடைகள் வழக்கம்போல் இயங்கும்  மு.க ஸ்டாலின்
    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது  பாஜக
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு  காவல்துறை
    திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து காவல்துறை

    செந்தில் பாலாஜி

    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமலாக்க இயக்குநரகம்

    தமிழக அரசு

    எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள்  செந்தில் பாலாஜி
    பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு தமிழ்நாடு
    பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு கலைஞர் கருணாநிதி
    ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025