NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு  
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு  
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு  

    எழுதியவர் Nivetha P
    Jul 12, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கினை தற்போது 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.வி.கார்த்திகேயன் கடந்த 2 நாட்களாக விசாரித்து வருகிறார்.

    அதன்படி இன்று நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி அவர்கள் பக்க நியாயத்தினை முன்வைத்து வாதாடினார்.

    அதன் பின்னர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

    கைது 

    ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையினை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, ஜூலை 14ம் தேதி இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒரு முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று(ஜூலை.,12) அவர் காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது அவரிடம் உடல்நிலை குறித்து விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலினை வரும் ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    தமிழ்நாடு

    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல்  ஆர்.என்.ரவி
    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட்  காவல்துறை
    தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025