NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை 
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை 

    எழுதியவர் Nivetha P
    Jun 22, 2023
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 14ம்தேதி காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது பாதி வழியிலேயே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது இருதயத்துடிப்பில் மாறுபாடு இருந்த காரணத்தினால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து கண்காணித்து வந்தனர்.

    இதனிடையே அவரது மனைவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரினார்.

    அவரது கோரிக்கையினை நீதிமன்றம் ஏற்றதையடுத்து, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

    உடல்நிலை 

    தீவிர கண்காணிப்பில் செந்தில் பாலாஜி 

    அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அதன்படி, நேற்று(ஜூன்.,21)இந்த அறுவை சிகிச்சையானது காவேரி மருத்துவமனையிலேயே 5 மணிநேரம் நடந்துள்ளது.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்றும், அவரை பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிரக்கண்காணிப்பில் வைத்துள்ளார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் 2-3 நாட்களுக்கு அவர் ஐசியூ வார்டில் வைக்கப்பட்டிருப்பார், பின்னர் நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, அறுவை சிகிச்சை முடிந்ததையடுத்து செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை ஸ்வாசம் வைக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணிநேரத்திற்கு பிறகு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு அவர் இயற்கையான முறையில் சுவாசிக்க துவங்குவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி
    தமிழகம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    தமிழ்நாடு

    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழகம்
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் திமுக
    நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள் நீட் தேர்வு
    'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம் திமுக

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    தமிழகம்

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! இந்தியா
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு!  கருணாநிதி

    தமிழக அரசு

    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு
    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு  தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025