NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம்
    செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம்

    செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம்

    எழுதியவர் Nivetha P
    Jun 20, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன்.,14ம்தேதி காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    கிட்டத்தட்ட 17 மணிநேரம், நள்ளிரவுவரை தொடர்ந்த இந்த சோதனைக்குப்பிறகு அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றுனர்.

    அப்போது அவருக்கு பாதி வழியிலேயே நெஞ்சுவலி வந்த காரணத்தினால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனிடையே, அமைச்சரின் மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

    அந்த மனுவிற்கு நீதிமன்றமும் ஒப்புதலளித்த நிலையில், ஜூன் 15ம்தேதி இரவு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில்பாலாஜியிடம் விசாரணையினை மேற்கொள்ள முடியவில்லை.

    மனித உரிமை ஆணையம் 

    அமலாக்கத்துறைக்கு 6 வார கால அவகாசம் 

    இதனை காரணமாக கொண்டு அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்த வழக்கு நாளை(ஜூன்.,21)விசாரணைக்கு வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டப்பொழுது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து இந்த மனித உரிமை மீறல் புகார் குறித்து அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குனர் 6 வார கால அவகாசத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மேலும் கைது செய்யப்படும் பொழுது தான் தாக்கப்பட்டதாக ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசனிடம் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மின்சார வாரியம்
    மனித உரிமைகள் ஆணையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை  சென்னை
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழகம்
    செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு தமிழகம்

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு செய்தி
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    மனித உரிமைகள் ஆணையம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025