Page Loader
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு - ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி 
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு - ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு - ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி 

எழுதியவர் Nivetha P
Nov 15, 2023
07:29 pm

செய்தி முன்னோட்டம்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி அவருக்கு இதயத்தில் அடைப்பு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பின் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிப்பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் அவர் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று(நவ.,15)மாலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மருத்துவமனையில் அனுமதி