பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார்
பிரபல சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ் நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95. நாரிமனின் மகன் ரோஹின்டன்-உம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரபல வழக்கறிஞரும் ஆவார். நாரிமன் ஜனவரி 10, 1929 அன்று, மியான்மரில், ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தனது சேவை தொடங்கினார். உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க அவருக்கு வந்த வாய்ப்பை அவர் நிராகரித்து, வழக்கறிஞராகவே தனது பணியை தொடர்ந்தார் நாரிமன். 1971 முதல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருந்த அவர், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். நாரிமன், பத்ம பூஷன், பத்ம விபூஷன் உட்பட நாட்டின் உயரிய விருதுகளை பெற்றவர்.