NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
    இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18ஆம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் இன்று(மார் 13) தெரிவித்துள்ளது.

    இந்த விஷயத்தில் எடுக்கும் எந்த முடிவும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது "முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்" என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    "இந்த தீர்ப்பு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்- யாருடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாம், இது பரிசீலிக்கப்பட வேண்டும்" என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறி இருக்கிறது.

    இந்தியா

    மத்திய அரசு நேற்று கூறி இருந்த கருத்துக்கள்

    "எழுப்பப்பட்ட இந்த பிரச்சனைகள், அரசியலமைப்புச் சட்டம் A 145(3)ஐ கருத்தில் கொண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் தீர்க்கப்பட்டால் அது பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, இதை ஒரு அரசியலமைப்பு அமர்வின் முன் வைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்." என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    கணவன், மனைவி, குழந்தைகள் என்ற இந்திய குடும்ப முறைக்கு ஒரே பாலின திருமணங்கள் ஏற்றதல்ல என்று மத்திய அரசு நேற்று கூறி இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

    இப்படி கூறிய மத்திய அரசு, பால்புதுமையினர்(LGBTQ+) தம்பதிகளால் தாக்கல் ,செய்யப்பட்டிருக்கும் மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கோரி இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை மத்திய அரசு
    ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள் டெல்லி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா பாஜக
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் ஹரியானா

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025