NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு
    இந்தியா

    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு

    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு
    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2023, 10:48 am 1 நிமிட வாசிப்பு
    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு
    தோராயமான மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர்(LGBTQ+) வாழ்கின்றனர்.

    நாட்டில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து மத்திய அரசு நேற்று(மார் 12) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது. தற்போதுள்ள "இந்திய குடும்ப" அமைப்பை செயல்படுத்தும் போது, ​​தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை பதிவு செய்வது தனிப்பட்ட சட்டங்களை மீறும் என்றும் நாட்டில் "ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்புகளை" சீர்குலைக்கும் என்றும் அரசாங்கம் வாதிட்டுள்ளது. தோராயமான மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர்(LGBTQ+) வாழ்கின்றனர். செப்டம்பர் 2018 அன்று, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தண்டனைச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவு 377இன் சில பகுதிகளைத் நீக்கி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமற்றது என்று கூறியது.

    எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒன்றிணைவதே திருமணமாகும்: மத்திய அரசு

    இருப்பினும், இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களை சட்டபூர்வமாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற இந்திய குடும்ப முறைக்கு ஒரே பாலின திருமணங்கள் ஏற்றதல்ல என்று கூறிய மத்திய அரசு, "திருமணம் என்ற கருத்தாக்கமானது, எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒன்றிணைவதாகும். இந்த வரையறை சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும்... திருமண சட்டங்களில் வேரூன்றியுள்ளது. இந்த வரையறை நீதித்துறையினால் தொந்தரவு செய்யப்படவோ நீர்த்துப்போகவோ கூடாது." என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி நான்கு ஒரே பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு இந்த கருத்துக்களை கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்

    மத்திய அரசு

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி

    உச்ச நீதிமன்றம்

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை  டெல்லி
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  ஜல்லிக்கட்டு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023