NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு 
    நாகார்ஜுனா சாகர் அணையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) மேற்பார்வையிட இருக்கிறது.

    ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 02, 2023
    11:20 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று தெலுங்கானா தேர்தல் வாக்கு பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெலுங்கானா அதிகாரிகளின் தடுப்புகளை மீறி நாகார்ஜுனா சாகர் அணைக்குள் நுழைந்த ஆந்திர அதிகாரிகள், அந்த அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர்.

    எனவே, நாகார்ஜுனா சாகர் அணை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தின் கிருஷ்ணா நதியின் இடையே கட்டப்பட்டிருக்கும் நாகார்ஜுன சாகர் அணை, தெலுங்கானா-ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவானதாகும்.

    எனவே, அந்த இரு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் பிரச்சனை பல காலங்களாக நீடித்து வருகிறது.

    நாகார்ஜுன அணையில் மொத்தம் 29 மதகுகள் அமைந்துள்ள நிலையில் அதில் 1 முதல் 13 மதகுகள் தெலுங்கானாவிற்கும், மீதமுள்ள மதகுகள் ஆந்திராவிற்கும் உரியதாகும்.

    டவ்கிலோத்

    'இந்த நீர் எங்களுடையது': ஆந்திர அமைச்சர் 

    இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில், பெரும்பாலான தெலுங்கானா அதிகாரிகள் வாக்குப்பதிவு தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​கிட்டத்தட்ட 700 ஆந்திர போலீசார் நாகார்ஜுன சாகர் அணைக்குள் நுழைந்து ஒரு மணி நேரத்திற்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட்டனர்.

    நேற்று இதனால் அப்பகுதியில் இரு மாநில அதிகாரிகளுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    "நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை. 66% கிருஷ்ணா நதி நீர் ஆந்திராவுக்கும், 34% தெலுங்கானாவுக்கும் சொந்தமானது. எங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு சொட்டு தண்ணீரைக் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்கள் பகுதியில் எங்கள் கால்வாயைத் திறக்க முயற்சித்தோம். இந்த நீர் எங்களுடையது" ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு கூறியுள்ளார்.

    ஜடக்வப்வே

    மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டம் 

    அங்கு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நவம்பர் 28-ஆம் தேதிக்கு முன்பு நாகார்ஜுனா சாகர் அணை எப்படி இருந்ததோ அதே நிலையை மீட்டெடுக்குமாறு இரு மாநிலங்களிடமும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பதற்றத்தை போக்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தின்போது, நாகார்ஜுனா சாகர் அணை மற்றும் ஸ்ரீசைலம் அணை தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளையும் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியத்துக்கு(KRMB) மாற்றுவது தொடர்பான விவாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டௌகி

    CRPF கண்காணிப்பில் நாகார்ஜுனா சாகர் அணை

    மேலும் மோதலைத் தவிர்க்க, நாகார்ஜுனா சாகர் அணையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) மேற்பார்வையிட இருக்கிறது.

    ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினருக்கும் கிடைக்க வேண்டிய தண்ணீர் பங்கீட்டை இப்போதைக்கு CRPF கண்காணிக்கும்.

    சுமார் 500 ஆயுதம் தாங்கிய ஆந்திர போலீசார் நாகார்ஜுனா சாகர் அணைக்கு வந்து சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாகவும், கேட் எண் 5 மற்றும் 7யில் உள்ள ஹெட் ரெகுலேட்டர்களை திறந்து சுமார் 5,000 கனஅடி நீரை வெளியேற்றியதாகவும் தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி குற்றம் சாட்டியதை அடுத்து நேற்று இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    டக்ஜ்வ்க்

    ஆந்திர போலீசாருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு

    மேலும், ஆந்திராவின் இந்த நடவடிக்கை தெலுங்கானாவில் "சட்டம் ஒழுங்கு பிரச்சனையை" உருவாக்கி உள்ளது என்றும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள இரண்டு கோடி மக்களின் குடிநீர் விநியோகத்தை இதுகடுமையாக பாதிக்கும் என்றும் தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி கவலை தெரிவித்தார். .

    மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, ​​இந்த பிரச்சனையையும் பெரிதாகியது.

    இதனையடுத்து, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஆந்திர போலீசாருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர காவல்துறையினர் இதேபோல நாகார்ஜுனா சாகர் அணைக்குள் நுழைய முயன்றனர். ஆனால் தெலுங்கானா பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த முயற்சியை தடுத்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    தெலுங்கானா
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆந்திரா

    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு உலகம்
    ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி  கோவில்கள்
    நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி நடிகர் சூர்யா
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் விவசாயிகள்

    தெலுங்கானா

    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா
    ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ உடற்பயிற்சி

    மத்திய அரசு

    அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி உத்தரப்பிரதேசம்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு பிரதமர் மோடி
    அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு.. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுவது எப்படி? இந்தியா
    கழிவுநீர் அகற்றுகையில் உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு  உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை உத்தரப்பிரதேசம்
    ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் நோய்கள்
    ஆய்வு கட்டுரை வடிவமைப்பில் திருமண அழைப்பிதழ் - இணையத்தில் வைரல்  திருமணம்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025