NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 02, 2025
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்திய மழை காரணமாக இதமான சூழல் நிலவிய நிலையில், கடுமையான கோடை வெப்பம் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் திரும்பியுள்ளது.

    மாநிலம் முழுவதும் 11 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின்படி, மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 105.26° ஃபாரன்ஹீட் அளவிற்கு உயர்ந்துள்ளது.

    வேலூர் தொடர்ந்து 104° ஃபாரன்ஹீட் ஆகவும், சென்னையின் நுங்கம்பாக்கம் மற்றும் மதுரை நகரம் போன்ற பிற நகர்ப்புறங்களில் முறையே 102.02° ஃபாரன்ஹீட் மற்றும் 102.56° ஃபாரன்ஹீட் ஆகவும் பதிவாகியுள்ளது.

    மாநிலத்தின் பல பகுதிகளில் தற்காலிக நிவாரணம் அளித்த பல நாட்கள் பரவலாக பெய்த மழைக்குப் பிறகு வெப்பம் மீண்டும் எழுந்துள்ளது.

    வெப்பநிலை

    வெப்பநிலை உயர்வு

    பிற பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வெப்பநிலை உயர்வு காணப்பட்டது. சென்னையின் மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் தலா 101° ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, திருத்தணி மற்றும் அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 100° ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    கடுமையான வெப்பநிலை மீண்டும் வருவது, குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    வரும் நாட்களில் அதிக வெப்பநிலை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, கடந்த வாரம் வெப்பநிலை குறைந்ததால், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திட்டமிட்டப்படி, திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை

    வானிலை அறிக்கை

    இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன? வெப்ப அலைகள்
    மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது! தமிழகம்
    தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு; மீனவர்களுக்கும் எச்சரிக்கை கனமழை
    தென் மாவட்ட மக்களே, இந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை! கனமழை

    வானிலை எச்சரிக்கை

    இன்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை அறிக்கை
    தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல் தமிழ்நாடு
    இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    இன்னும் நான்கு நாட்களுக்கு இதேநிலைதான்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை வானிலை அறிக்கை

    வானிலை எச்சரிக்கை

    ஆரஞ்சு அலெர்ட்; ஐபிஎல் 2025 தொடக்க விழா மற்றும் முதல் போட்டிக்கு வருண பகவான் வழி விடுவாரா? ஐபிஎல் 2025
    தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் 3 டிகிரி  செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம்  வெப்ப அலைகள்
    ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை

    வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் ஏப்ரல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தமிழகம்
    அடுத்த 2 நாட்களுக்கு தமிழத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு கனமழை
    வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழை எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மழை காற்றழுத்த தாழ்வு நிலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025