NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு 
    நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு

    நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு 

    எழுதியவர் Nivetha P
    Sep 24, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது.

    இந்த வைரஸ் காரணமாக 2 பேர் கேரளாவில் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும் தகவல்கள் வெளியானது.

    அதே போல் தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்கள் என 1200 பேர் கண்டறியப்பட்டனர்.

    நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனிடையே கேரளா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

    நிபா 

    முகக்கவசம் கட்டாயம் என உத்தரவு 

    இந்நிலையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்ட1200 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் அவர்களுள் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

    இதற்கிடையே, நிபா வைரஸ் பரவலை தடுக்க கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    கடைகள் திறப்பு நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் நாளை(செப்.,25) முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்கும் என்று கோழிக்கோடு மாவட்டத்தின் ஆட்சியர் கீதா உத்தரவிட்டுள்ளார்.

    எனினும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிபா வைரஸ்
    கேரளா
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    நிபா வைரஸ்

    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன வைரஸ்
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர் கோழிக்கோடு
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல் கோழிக்கோடு

    கேரளா

    உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள் உணவு பிரியர்கள்
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு மருத்துவக் கல்லூரி
    கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்  டெங்கு காய்ச்சல்
    கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை இந்தியா

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025