NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து 
    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி உத்தரவிட்டது

    ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 21, 2024
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மாசும், மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறி, அதனை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி 2018ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் கடும் போராட்டம் நடத்தினர்.

    அந்த போராட்டத்தின் 100வது நாள் அன்று, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இதனைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி உத்தரவிட்டது.

    தமிழக அரசு ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்டெர்லைட் ஆலை

    தமிழ்நாடு அரசு தரப்பு: முன்னதாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழு, ஆலையை ஆய்வு செய்ததில், கழிவுகளை கையாள உரிய கட்டமைப்புகள் இல்லை. சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதை உறுதி செய்தது

    நீதிபதிகள்: ஆலை மூடப்பட்டு 6 ஆண்டுகள் ஆவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு எப்படி இருக்கிறது… https://t.co/OrmcTQJ8fW

    — Sun News (@sunnewstamil) February 21, 2024

    தீர்ப்பு

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

    உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதித்தால் சுகாதார பிரச்னைகள் தொடர் கதையாகிவிடும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து காற்று மாசுவை ஏற்படுத்தி, விதிகளை மீறி வருகிறது".

    "நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் வேதாந்தா நிறுவனம் மேற்கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்கக் கூடாது"என்று வாதிட்டார்.

    வாதங்களைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி,"தூத்துக்குடி பகுதி மக்களின் ஆரோக்கியம், நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானியர்கள் நேரடியாக நீதிமன்றம் வர இயலாது என்பதால் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தவறு என்று கூற முடியாது. ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    உச்ச நீதிமன்றம்
    வேதாந்தா

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    தூத்துக்குடி

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்  நிர்மலா சீதாராமன்
    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் காவல்துறை
    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர்

    வேதாந்தா

    தனது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் வணிகம்
    மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல் வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025