NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு 
    அனைத்து நீதிமன்றங்களும் பரிசீலிக்க வேண்டிய பல நிபந்தனைகளை வகுத்துள்ளது

    விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்க இவை அவசியம்: உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 12, 2024
    09:20 am

    செய்தி முன்னோட்டம்

    பிரவீன் குமார் ஜெயின் மற்றும் அஞ்சு ஜெயின் தம்பதியினரின் விவாகரத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜீவனாம்சத்திற்கான அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பரிசீலிக்க வேண்டிய பல நிபந்தனைகளையும், காரணிகளையும் புதன்கிழமை வகுத்துள்ளது.

    பிரவீன் குமார் ஜெயின் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.5 கோடி வழங்க உத்தரவிட்ட நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி பிரசன்னா வி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, விவாகரத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கான ஜீவனாம்சத் தொகையை தீர்மானிக்கும் முன் எட்டு அம்ச நிபந்தனைகளை வகுத்தது.

    காரணிகள்

    ஜீவனாம்சத்தை தீர்மானிப்பதற்கான எட்டு முக்கிய காரணிகளை பட்டியலிட்ட உச்ச நீதிமன்றம்

    கணவன் மற்றும் மனைவியின் சமூக மற்றும் பொருளாதார நிலை

    எதிர்காலத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் அடிப்படை தேவைகள்

    இரு தரப்பினரின் தகுதி மற்றும் வேலைவாய்ப்பு வருமானம் மற்றும் சொத்துக்களின் ஆதாரங்கள்

    மாமியார் வீட்டில் வசிக்கும் மனைவியின் வாழ்க்கைத் தரம்

    குடும்பத்தைக் கவனிப்பதற்காக அவள் வேலையை விட்டுவிட்டாளா?

    வேலை செய்யாத மனைவிக்கு சட்டப் போராட்டத்திற்கு நியாயமான தொகை

    கணவரின் நிதி நிலை

    அவரது வருமானம் மற்றும் பராமரிப்பு கொடுப்பனவுடன் மற்ற பொறுப்புகள் என்னவாக இருக்கும் இவை தான் உச்ச நீதிமன்றம் முன்வைத்த நிபந்தனைகள்

    வழக்கு

    பிரவீன் குமார் ஜெயின்-அஞ்சு ஜெயின் விவாகரத்து வழக்கு 

    பிரவீன் குமார் ஜெயின்-அஞ்சு ஜெயின் விவாகரத்து வழக்கின் தீர்ப்பை உச்சரித்த பெஞ்ச், அவரது வயது வந்த மகனின் பராமரிப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பிற்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

    திருமணத்திற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இருவரும் அடுத்த 20 வருடங்கள் தனித்தனியாக வாழ்ந்தனர்.

    இணக்கமின்மை மற்றும் இறுக்கமான உறவுகளின் குற்றச்சாட்டுகள் அவர்களின் திருமண விவகாரத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

    அஞ்சு அதிக உணர்திறன் கொண்டவர் என்றும், அவர் தனது குடும்பத்தினரை அலட்சியமாக நடத்துவதாகவும் பிரவீன் குற்றம் சாட்டினார்.

    மறுபுறம், பிரவீனின் நடத்தை தன்னிடம் நன்றாக இல்லை என்று அஞ்சு குற்றம் சாட்டினார்.

    இதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வழக்கில் நிபந்தனைகளை குறிப்பிட்டு விவாகரத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    விவாகரத்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உச்ச நீதிமன்றம்

    பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்  பதஞ்சலி
    கனிமங்கள் மீதான ராயல்டி நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும்: உச்ச நீதிமன்றம் மாநிலங்கள்
    பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை கொல்கத்தா
    பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டாஸ்க் போர்ஸ்: உச்சநீதிமன்றம்  மருத்துவம்

    விவாகரத்து

    தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம் தனுஷ்
    ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு மீண்டும் ஒன்று சேரலாம்: சாய்ரா பானுவின் வழக்கறிஞர் ஏஆர் ரஹ்மான்
    கணவர்களுக்கு எதிரான 'தனிப்பட்ட பழிவாங்கலுக்கு' சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025