NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஒதுவார்களின் நிலைமை: சிறப்புமிக்க மரபை பாதுகாக்கும் பணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஒதுவார்களின் நிலைமை: சிறப்புமிக்க மரபை பாதுகாக்கும் பணி
    இன்றைய ஓதுவார்களின் நிலைமை

    சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஒதுவார்களின் நிலைமை: சிறப்புமிக்க மரபை பாதுகாக்கும் பணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 07, 2024
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    ஓதுவார்கள், தமிழகத்தில் மன்னர் காலத்தில் முக்கிய பங்கு வகித்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் சைவ கோவில்களில் திருமுறைகள் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடி வந்தனர்.

    சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் மத மற்றும் கலாச்சார வாழ்க்கையில் இவர்கள் முக்கிய இடம் பெற்றனர்.

    சிவபெருமானை போற்றும் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடிய ஓதுவார்கள், அந்தகாலத்தில் கோயில்களின் வழிபாட்டு முறையின் முக்கிய அங்கமாக இருந்தனர்.

    தற்போது, இவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருக்கும்போதிலும், தமிழ்நாட்டின் சில கோயில்கள் மற்றும் சமுதாயங்களில் இவர்கள் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது.

    ராஜரா சோழனின் சதயவிழா நவம்பர் 10 அன்று கொண்டாடப்படும் நிலையில், ஓதுவார்கள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

    சோழர் காலம் 

    சோழர் காலத்தில் ஓதுவார்களின் வரலாற்றுப் பங்கு

    சோழர் ஆட்சியில், குறிப்பாக முதலாம் ராஜ ராஜ சோழன் ஆட்சியின்போது, ஓதுவார்கள் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்களாக இருந்தனர்.

    சைவ நாயன்மார்கள் இயற்றிய தேவாரம் மற்றும் திருப்பதிகங்களை கோயில்களில் பாடுவதன் மூலம் இவர்கள் தெய்வம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவை உருவாக்கினர்.

    அரசின் ஆதரவால், இந்த பாட்டுப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.

    சைவ சமயத்தைப் பின்பற்றும் கோயில்களில் நடக்கும் பூஜைகள், திருவிழாக்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது.

    மாற்றம்

    காலப்போக்கில் நிலைமையில் ஏற்பட்ட மாற்றம்

    சோழர் காலத்திற்கு பிறகு, அரசின் ஆதரவு குறைவதன் காரணமாக ஓதுவார்களின் நிலைமை மோசமானது.

    இதனால் ஓதுவார் பனி செய்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

    இந்நிலையில், ஓதுவார் மரபை பாதுகாக்க, தமிழ்நாடு அரசு மற்றும் பல கலாச்சார அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    குறிப்பாக தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் பழனி முருகன் கோவில் ஆகிய இடங்களில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு ஓதுவார் நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எனினும், இதில் சேறும் இளைஞர்களின் எண்ணிக்கையும் சொற்பமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    எதிர்காலம்

    ஓதுவார் பணிக்கான சவால்கள் மற்றும் எதிர்காலம்

    ஓதுவார் பணிக்கு தொடர்ந்து ஆதரவுகள் இருந்தாலும், அவர்கள் இன்னும் சில சவால்களை எதிர்கொள்கின்றனர்.

    டிஜிட்டல் ஊடக வளர்ச்சியால் பக்திப் பாடல்கள் பல வடிவங்களில் வந்துள்ளதால் இளைய தலைமுறையினர் புதுமையான வழிபாட்டுப் பாடல்களை விரும்புகின்றனர்.

    எனினும், கோவில்களின் பாரம்பரியத்தில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஓதுவார் வாழ்க்கை மரியாதைக்குரிய பணியாகவே தொடர்கிறது.

    அதிகமான விழிப்புணர்வு மற்றும் அரசின் ஆதரவு இருந்தால், ஓதுவார்களின் பணி தொடர்ந்து பாரம்பரியத்தின் முக்கியப் பங்காக இருக்கும்.

    இன்றைய ஒதுவார்கள் சோழர் காலத்திலிருந்தே வாழையடி வாழையாக வந்த நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார்கள்.

    இவர்களின் சமூகப் பங்கு மாறியிருந்தாலும், அரசின் ஆதரவு மற்றும் சமுதாயத்தின் ஈடுபாடு இருந்தால், இவர்கள் எப்போதும் பாரம்பரியத்தின் முக்கியமான கலாச்சார பகுதியாகவே இருப்பார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சதய விழா
    ராஜ ராஜ சோழன்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    சதய விழா

    சதய விழா ஸ்பெஷல்: அண்ணன் அதித்த கரிகாலனின் கொலையாளிகளை கண்டறிந்து நீதி வழங்கிய ராஜ ராஜ சோழர் பொன்னியின் செல்வன்
    சதய விழா 2024: ராஜா ராஜ சோழனின் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள் தஞ்சை பெரிய கோவில்

    ராஜ ராஜ சோழன்

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா - தாஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தஞ்சை பெரிய கோவில்
    சதய விழா 2024 ஸ்பெஷல்: இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி தஞ்சாவூர்
    சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி? கோவில்கள்

    தமிழ்நாடு

    தீபாவளிக்கு கூடுதளாக ஒருநாள் விடுமுறை; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட் வானிலை அறிக்கை
    தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு தீபாவளி

    தமிழ்நாடு செய்தி

    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு தங்கம் வெள்ளி விலை
    பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025