NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு 
    சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு

    சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2023
    02:34 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம், சபரிமலையில் நாளை(டிச.,27)மண்டல பூஜை நடக்கவுள்ளது.

    நேற்று(டிச.,25)ஒரேநாளில் 1,00,909 பேர் சாமி தரிசனம் செய்ததாகவும், சுமார் 15 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய இன்றும், நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இன்று(டிச.,26) கூட்டம் ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, இன்று மாலை தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானம் வந்து சேரும் என்பதால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனால் இன்று பம்பையிலிருந்து சன்னிதானம் செல்வதற்கு மதியம் 1-மாலை 6 மணிவரை அனுமதியில்லை.

    அதனை தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு தங்க வங்கி அணிவித்து தீபாராதனை காட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சபரிமலை

    நாளை சுபமுகூர்த்தத்தில் மண்டலப்பூஜை நடக்கவுள்ளது

    அதே போல், மாலை 3 மணிக்கு பதில் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

    தங்க அங்கி ஊர்வலத்தை சன்னிதான தேவசம் அதிகாரிகளால் வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் தந்திரி மற்றும் மேல்சாந்தி தங்க அங்கியை கோயில் கருவறைக்குள் எடுத்து சென்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    நாளை(டிச.,27)காலை 10.30-11.30 மணிக்கு இடையேயுள்ள சுபமுகூர்த்தத்தில் மண்டலப்பூஜை நடக்கவுள்ளது.

    மண்டல பூஜை தினமன்று காலை 9.45 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதனிடையே, மண்டல பூஜையையொட்டி இன்று(டிச.,26) 64 ஆயிரம் பக்தர்களும், நாளை 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலைக்கு செல்ல முடியும் என்பதால் கூட்டம் கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபரிமலை
    கேரளா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  கேரளா
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  மாற்றுத்திறனாளி
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் திருப்பதி
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? அரசு திட்டங்கள்

    கேரளா

    கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு பள்ளி மாணவர்கள்
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  டெல்லி
    தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார் மருத்துவமனை
    கேரளா கல்லூரி விழாவில், கூட்ட நெரிசலில் நான்கு மாணவர்கள் இறப்பு; நடந்தது என்ன? மழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025