NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்
    ஆதார் அட்டை

    ஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 26, 2024
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செப்டம்பர் 1 முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாற்றங்கள் வரவுள்ளன.

    இந்த மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகளும் அடங்கும்.

    மேலும், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான சிறப்பு அறிவிப்புகள் இருக்கலாம். செப்டம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் மற்றும் அது உங்களுக்கு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதில் பார்க்கலாம்.

    எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றுவது வாடிக்கையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இம்முறையும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிராய் விதிகள்

    போலி அழைப்புகள் குறித்த டிராய் விதிகளில் மாற்றம்

    செப்டம்பர் 1ஆம் தேதி முதல் போலி அழைப்புகளைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டிராய் கடுமையான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

    ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை 140 மொபைல் எண்களின் தொடர்களில் இருந்து தொடங்கி பிளாக்செயின் அடிப்படையிலான டிஎல்டிக்கு அதாவது விநியோகிக்கப்பட்ட லேசர் தொழில்நுட்ப தளத்திற்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் வணிக செய்திகளை மாற்றுமாறு டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.

    இது போலி அழைப்புகளை செப்டம்பர் 1 முதல் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விமான எரிபொருள் மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதங்கள்: எல்பிஜிக்களைப் போலவே, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விமான எரிபொருள் மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி விலைகளும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றப்படுவது வாடிக்கையாகும்.

    கிரெடிட் கார்டு

    கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம்

    செப்டம்பர் 1 முதல், எச்டிஎப்சி வங்கி பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2,000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும்.

    மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் கல்விப் பணம் செலுத்துவதற்கு எச்டிஎப்சி வங்கி எந்த வெகுமதியையும் வழங்காது.

    செப்டம்பர் 2024 முதல், கிரெடிட் கார்டுகளில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் குறைக்கும். பணம் செலுத்தும் தேதியும் 18ல் இருந்து 15 நாட்களாக குறைக்கப்படும்.

    யுபிஐ மற்றும் பிற தளங்களில் பணம் செலுத்துவதற்காக ரூபே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பிற கட்டணச் சேவை வழங்குநர்களின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் பெறும் அதே வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்கள்.

    ஆதார் அட்டை

    ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்தல்

    ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஆதார் தொடர்பான சில விஷயங்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியாது.

    செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு, ஆதாரை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி 14 ஜூன் 2024 ஆக இருந்தது.

    இது செப்டம்பர் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.

    அகவிலைப்படி: செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகும்.

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​அரசு ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது 3 சதவீத உயர்வுக்குப் பிறகு, 53 சதவீதமாக மாறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆதார் புதுப்பிப்பு
    கிரெடிட் கார்டு
    யுபிஐ
    மத்திய அரசு

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் தமிழ்நாடு
    ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி? தொழில்நுட்பம்

    கிரெடிட் கார்டு

    சோலோ-ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய  7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ!  பயணம்
    கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் ரிசர்வ் வங்கி

    யுபிஐ

    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! ஆன்லைன் மோசடி
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? வங்கிக் கணக்கு
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் இந்தியா

    மத்திய அரசு

    நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்  நீட் தேர்வு
    ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல்  ஜிஎஸ்டி
    நீட் முறைகேடு விவகாரம்: பொது தேர்வு செயல்முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய உயர்மட்ட குழுவை நியமித்தது மத்திய அரசு  நீட் தேர்வு
    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025