NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது 
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது

    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 19, 2023
    07:36 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பூர் அவிநாசி சாலையில் 'பெட் பாங்க் பைனான்சியல் சர்வீஸ்' என்னும் பெயரில் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இங்கு 297 பவுன் போலி நகைகள் வாடிக்கையாளர்கள் பெயரில் அடகு வைக்கப்பட்டு லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக அதன் மண்டல வர்த்தகப்பிரிவு பொறுப்பாளர் சரண் சிவகுமார் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் அந்த பேர்களில் உள்ள வாடிக்கையாளர்களை போலீசார் விசாரித்துள்ளார்கள்.

    அப்போது அவர்கள் அடகு வைத்த நகைகளை உரிய பணம் செலுத்தி திருப்பி விட்டதாக கூறியுள்ளார்கள்.

    அதனால் அவர்கள் பெயரில் வங்கி பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து சோதனை செய்து பார்த்துள்ளார்கள்.

    அப்போது அந்த நகைகள் யாவும் போலி என்று தெரியவந்தது.

    நகை 

    மோசடி செய்தோரை கண்டறிந்த போலீசார் 

    கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 376 கிராம்(297 பவுன்)நகையினை இதுபோல் போலியாக தயாரித்து ரூ.81 லட்சம் மோசடி நடந்துள்ளது.

    இந்த சம்பவம் 2019ம்ஆண்டு முதல் 2021ம்ஆண்டு வரை நடந்துள்ளது.

    இதனையடுத்து போலீசார் நிதிநிறுவன மேலாளரான உடுமலையை சேர்ந்த சிவா(29), நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய திருப்பூர் செட்டிபாளையம் பொங்குபாளையத்தை சேர்ந்த பிரபு(32) மற்றும் ஊழியரான குன்னத்தூரை சேர்ந்த விஸ்வநாதன்(32) ஆகியோரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    அப்பொழுது அடகுவைத்த நகைகளை திருப்பிச்சென்ற பிறகு அந்த வாடிக்கையாளர்களின் கணக்கினை முடிக்காமல், அதில் ஏற்கனவே வைத்த நகைப்போல் போலி நகையினை தயாரித்து கொண்டுவந்து வங்கி பெட்டகத்தில் வைத்து ரூ.81லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதனைதொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் போலீசார் நேற்று(ஏப்ரல்.,18) கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பூர்
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு
    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு

    காவல்துறை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்

    காவல்துறை

    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் உத்தரப்பிரதேசம்
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன் ஆந்திரா
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆளுநர் மாளிகை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? உலகம்
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  சேலம்
    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025