NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு 
    கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

    கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு 

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2023
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இத்தகைய பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க மாநில அரசு போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.

    குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிலான அதி கனமழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அம்மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    தண்டவாளங்களில் வெள்ளம் பாய்ந்ததால் பாதிப்புகள் ஏற்பட்டு ரயில்சேவையும் நிறுத்தப்பட்டது.

    மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    மழை 

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 26 கோயில்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் 

    இதனிடையே அப்பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மெல்ல மெல்ல தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று(டிச.,26) துறை ரீதியிலான ஆய்வு கூட்டமானது சென்னை நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கொட்டிய அதிகனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 26 கோயில்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பாதிப்படைந்த அக்கோயில்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    நிதி ஒதுக்கீடு 

    சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ 5 கோடி நிதி

    மிக்ஜாம் புயல், கனமழையால் சேதமடைந்த கோயில்களை ₨5 கோடியில் சீரமைக்க திட்டம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சேதமடைந்த 26 கோயில்களை சீரமைக்க நிதி

    சென்னையில் அமைச்சர் சேகர்பாபு… pic.twitter.com/w2EScsRi61

    — Thanthi TV (@ThanthiTV) December 26, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெள்ளம்
    சென்னை
    தமிழ்நாடு
    அறநிலையத்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வெள்ளம்

    கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள்  பருவமழை
    சென்னை மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழைநீர் ஏன் தேங்கியது?- மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்  சென்னை
    இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: இன்று என்னென்ன சேவைகள் இயங்கும்? சென்னை
    சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்  சென்னை

    சென்னை

    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ?  வனத்துறை
    வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு  வெள்ளம்
    தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்  கனமழை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 14 தங்கம் வெள்ளி விலை

    தமிழ்நாடு

    ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை திமுக
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம்  சென்னை
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை

    அறநிலையத்துறை

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  கடலூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025