NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை
    போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது என போலீசார் தீவிர விசாரணை

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 19, 2025
    12:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளை வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உண்மை வைரத்திற்கு பதிலாக, போலி வைரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கம், வைர வியாபாரியான சந்திரசேகர் (56) மீது கடந்த மே 4ஆம் தேதி வடபழனி நட்சத்திர ஹோட்டலில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை கொள்ளை அடித்தனர்.

    இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வடபழனி போலீசார், 24 மணி நேரத்துக்குள் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் லாயிட் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து, வைரத்தையும் மீட்டனர். இந்த மீட்கப்பட்ட வைரங்களே போலி என தற்போது கூறப்பட்டுள்ளது.

    போலி வைரம்

    நீதிமன்றத்தில் போலி வைரம் ஒப்படைக்கப்பட்டதா?

    பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வைரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால், ஒப்படைக்கப்பட்ட வைரம் போலியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து, நீதிபதி உரிய சோதனைக்காக மதிப்பீட்டாளர்களை அழைத்துள்ளார்.

    அதே நேரத்தில், புகார்தாரர் நகைக்கடை உரிமையாளர் சந்திரசேகர், "போலீசார் உண்மை வைரத்தை மாற்றி வைத்துள்ளனர்" என சென்னை காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து, உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    சந்தேகம்

    சந்தேக பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள்

    இந்த விவகாரத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் இந்த வைரம் விற்பனை தொடர்பாக தன்னை அழைத்ததாக சந்திரசேகர் கூறியிருந்தாலும், அவரது பெயர் எழுத்துப்பூர்வ புகாரில் குறிப்பிடப்படவில்லை.

    இதனால் அந்த தொழிலதிபரின் சந்தேக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பறிமுதல் செய்யப்பட்ட வைரம் முதலில் தூத்துக்குடி மாவட்ட போலீசாரால் கைப்பற்றப்பட்டு பின்னர் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனால் அவர்களிடமும் விசாரணை நடைபெறும் எனக்கூறப்படுகிறது.

    இது தவிர, கொள்ளையரிடம் பறிமுதல் செய்த வைரத்தை, சந்திரசேகர் தரப்பில் கடைசியாக, ஜானகி, சுப்பிரமணி யன், மாசானம், வன்னிய ராஜன் ஆகியோர் பார்த்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீதிமன்ற காவல்
    கொள்ளை
    சென்னை
    காவல்துறை

    சமீபத்திய

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்

    நீதிமன்ற காவல்

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு   கைது
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு  கைது
    தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்

    சென்னை

    தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    ஐபிஎல் 2025: அறிமுகப் போட்டியிலேயே CSK -வை கலங்கடித்த மும்பை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் யார்? ஐபிஎல் 2025
    சென்னை போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக வைரலான ஸ்டார்ட்-அப் நிறுவனரின் X பதிவு; என்ன நடந்தது? ஸ்டார்ட்அப்
    சென்னை தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை கைது

    காவல்துறை

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு சென்னை
    பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் பங்களாதேஷ்
    போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் போட்டிருக்கா? இதை செய்தால் அபராதம் குறையலாம் போக்குவரத்து விதிகள்
    லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025