NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
    சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை பரிசோதித்தனர்.

    அதில் லேப்டாப்கள், அதன் உதிரி பாகங்கள் இருந்தது.

    அதனை பிரித்து பார்த்ததில் 900 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது.

    இதே போல், சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த 2 பெண் பயணிகளை சோதனை செய்த பொழுது 8 தங்க வளையல்கள் (766) தங்கம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    ரூ.1 கோடியே 59 லட்சம்

    3 கிலோ 148 கிராம் தங்கம் பறிமுதல் - 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது

    இதனை தொடர்ந்து, குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த ஆண் பயணியை சந்தேகத்தின்பேரில் தனியறைக்கு அழைத்துசெல்லப்பட்டு சோதனைசெய்தனர்.

    அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 645கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது.

    தொடர்ந்து இலங்கையில் இருந்து வந்த விமானத்தில், 2பெண் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் உடமைகளில் எதுவும்இல்லை. எனினும், சந்தேகம் தீராதநிலையில், இரண்டு பெண் சுங்கஅதிகாரிகள் அப்பெண்களை அறைக்குள் அழைத்தசென்று சோதனை செய்துள்ளனர்.

    அதில் அவர்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டுவந்த 837கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.1கோடியே 59லட்சம் மதிப்புள்ள 3கிலோ 148கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 7பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025